- வாலிபரே அத்ரம் ஹோட்டல்
- திருவனந்தபுரம்
- பிலிப் மார்ட்டின்
- மோலோமம்மம்
- தொடுபுழா, இடுக்கி மாவட்டம், கேரளா
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே மூலமற்றம் பகுதியை சேர்ந்தவர் பிலிப் மார்ட்டின் (26). வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர் சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மூலமற்றம் பகுதியில் உள்ள ஒரு சாலையோர ஓட்டலில் சாப்பிட சென்றார். அப்போது, மாட்டிறைச்சி குழம்பு கேட்டுள்ளார். ‘அது தீர்ந்து விட்டது. வேறு ஒருவருக்காக எடுத்து வைத்தது மட்டுமே உள்ளது,’ என ஓட்டல் உரிமையாளர் கூறினார். அதை தனக்கு தரும்படி மார்ட்டின் தகராறு செய்தார். ஓட்டலில் இருந்தவர்கள் அவரை கண்டித்தனர்.உடனே, காரில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து ஓட்டலில் இருந்தவர்கள் மீது மார்ட்டின் சுட்டார். அதிர்ஷ்டவசமாக யார் மீதும் குண்டு பாயவில்லை. அங்கு இருந்தவர்கள் கல்லால் அடித்ததால் தப்பியோடிய மார்ட்டின், எதிரில் பைக்கில் வந்த பஸ் கண்டக்டரான சனல் பாபு (34), அவரது நண்பர் பிரதீப் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில், சனல் பாபு அங்கேயே துடிதுடித்து இறந்தார். பிரதீப் படுகாயம் அடைந்தார். மார்ட்டின் காரில் ஏறி தப்பினார். படுகாயம் அடைந்த பிரதீப், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தப்பியோடிய மார்ட்டினை முட்டம் என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர். துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது, லைசென்ஸ் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்….
The post பீப் குழம்பு தீர்ந்ததால் வாலிபர் ஆத்திரம் ஓட்டலில் துப்பாக்கிச்சூடு கண்டக்டர் பரிதாப பலி appeared first on Dinakaran.